களத்தூர் கண்ணம்மாவில்
கையெடுத்துக் கும்பிட்ட
சிறுவனை இன்று இந்திய
சினிமா வணங்குகிறது.
விஸ்வரூபமாய் தொடரும்
தலைமுறைகளை வென்ற
தனி அவதாரம் கமல்.
முதல்
படத்திலேயே (களத்தூர்
கண்ணம்மா) சிறந்த
குழந்தை நட்சத்திரத்துக்கான
தேசிய விருதைப்
பெற்றவர் கமல்!
'களத்தூர் கண்ணம்மா',
'ஆனந்த ஜோதி', 'பார்த்தால்
பசி தீரும்',
'பாதகாணிக்கை',
'வானம்பாடி' என 5
படங்களில் நடித்த
பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம்
சேர்ந்தார் கமல். அவர்
வேறு திசைக்குப்
பயணப்பட்டது அதற்குப்
பிறகுதான்!
களத்தூர் கண்ணம்மாவில்
குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானாலும்கூட,
தனது குழந்தைப்
பருவத்து நடிப்பில்,பெரிய
நடிகர்கள் யாருக்கும்
மாஸ்டர் கேரக்டரில் கமல்
நடித்ததே இல்லை!
கமல் நடித்த படங்களைப்
பாராட்டி பாலசந்தர்
எழுதும்போது 'மை டியர்
ராஸ்கல்' என்றுதான்
அழைப்பார்!
கமலின் தந்தை உடல்
தகனத்துக்காக மயானத்தில்
வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன்,
சந்திரஹாசன், கமல்
மூவரும் சிதையின்
அருகில் நிற்க, திரும்பிப்
பார்த்த கமல் 'அண்ணா,
நீங்களும் வாங்க' என
இருவரை அழைத்தார்.
அவர்கள் ஆர்.சி.சக்தி,
ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா.
கதறித்
துடித்தபடி அவர்களும்
கொள்ளிவைத்தனர்!
ஃபிலிம்ஃபேர்
விருதை 18
முறைக்கு மேல் வாங்கிய
ஒரே இந்திய நடிகர்
கமல்தான்!
[.....]