"கேள்வியின் நாயகன்"
பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன். இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே . அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு. அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக [.....]
விநோத மரணங்கள் - தொடர்கதை 1
அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.
அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை [.....]
விநோத மரணங்கள் - தொடர்கதை முன் அறிமுகம்
விநோத மரணங்கள் , இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?
அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்! முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்! பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்! ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்! தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்! மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!
நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!
என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!
எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!
ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !
வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!
இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!
என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது! [.....]