சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்
விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே [.....]
வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.
நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.
கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா [.....]