அருகம்புல்

அருகம்புல்லின்
அற்புதத்தை எளிதாகப்
புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு.
மங்கள
நிகழ்வுகளின்போது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து, அதில்
அருகம்புல் செருகி வைப்பதைப்
பார்த்திருப்பீர்கள். அப்படி புல்
செருகப்பட்ட சாணம் காயும்
வரை அதில் புழு, பூச்சிகள்
உருவாவதில்லை. ஆனால், சாணத்தில்
சாதாரணமாக
இரண்டு நாட்களிலேயே புழுக்கள்
உருவாகிவிடும். புல் வகைகளில்
அரசு போன்றது அருகு. அதனால்தான்,
அந்தக் காலத்தில் மன்னர்கள்
பட்டாபிஷேகம் செய்யும்போது,
அருகம்புல்லை வைத்து மந்திரம்
ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ
எப்படி சிறந்து விளங்குகிறாயோ,
அதேபோல் மன்னர்களில் நானும்
சிறந்தோன் ஆகுக’
என்று முடிசூடும்போது மன்னர்கள்
கூற வேண்டும்
என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள
கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில்
அருகம்புல்லைப் போட்டு வைக்கும்
பழக்கம் இன்றைக்கும் நம்மிடம்
இருக்கிறது. அது மூட
நம்பிக்கையல்ல. கிரகண
நேரங்களில் ஊதாக்கதிர்
வீச்சு அதிகமாக இருக்கும். அதனால்,
ஏற்படும் பாதிப்புகளைக்
குறைக்கவே அருகை நீரில்
போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!
'அருகன்' என்றால் சூரியன்
என்று பொருள். ஒலிம்பிக்
வீரர்களுக்கெல்லாம்
முன்னோடிகளாகத் திகழும்
ஓட்டக்காரர்களான மான் மற்றும்
முயல் இரண்டுக்குமான உந்துசக்தி,
அவை தினமும் உண்ணும்
அருகம்புல்தான். மிருகங்களில்
பலமானவையும், வேகமானவையும்
பெரும்பாலும் சைவம் உண்ணும்
விலங்குகள்தான். யானை, குதிரை,
காண்டாமிருகம் அனைத்தும்
அருகம்புல்
உண்பவை என்பதை கவனத்தில்
கொள்ளுங்கள். விலங்குகளில் நாய்,
பூனை, கோழிகள்கூட நோய் வந்தால்,
அருகம்புல்லைக் கடித்துத்
துப்புவதைப் பார்க்கலாம்.
இப்படி கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கும்
நிவாரணியை நிராகரித்துவிட்டு,
மருத்துவமனைகளின் நீண்ட
வரிசையில்
காத்திருப்பதை வழக்கமாகவே வைத்தி
'அருகைப் பருகினால் ஆரோக்கியம்
கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம்.
அதனால்தான்
இதை 'விஷ்ணு மூலிகை’
என்று அழைத்தார்கள், சித்தர்கள்.
இதன் மருத்துவத் தன்மைகளை 'பால
வாகடம்' என்ற நூலில்
விளக்கியுள்ளார், அகத்தியர்.
பெரியவர்கள் மட்டுமல்லாமல்
குழந்தைகளுக்கும் ஏற்ற
மருந்து என்பதால்,
இதை 'குருமருந்து' எனவும்
அழைக்கிறார்கள்.
அருகம்புல் சாறு குடித்தால்,
அண்டாது நோய்!
காணும் இடமெல்லாம் காட்சி தரும்
அருகம்புல்லை எடுத்து, நீரில்
அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர்
சேர்த்து இடித்தோ,
அரைத்தோ சாறு எடுத்து காலையில்
வெறும் வயிற்றில் அருந்த
வேண்டும். இது, நீரிழிவு, உடல்
பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்
களுக்கு மிகச்சிறந்த மருந்து.
அருகு சாறு குடித்தால், இரவில்
நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா,
அருகம்புல் குணப்படுத்தும்
நோய்களின் பட்டியல், அதன்
வேர்களைப் போலவே நீளமானது.
அருகம்புல் சாறு குடித்தால்
சோர்வே தெரியாது. வயிற்றுப்புண்
குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா,
தோல் வியாதி, மலச்சிக்கல், பல்
ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக்
கோளாறுகள்,
மூட்டுவலி ஆகியவை நீங்கும் என
நீள்கிறது, பட்டியல்.
புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக
உள்ளது.
இதன் அருமையை நம்மைவிட
வெளிநாட்டினர்தான் அதிகம்
தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில், அருகம்புல்
சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்க
நாமும், தோசை, சப்பாத்தி,
ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல்
சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம
இலங்கையில் குழந்தைகள்
முதன்முதலில் பள்ளிக்குப்
போகும்போது, பாலில்
அருகம்புல்லை தோய்த்து வாயில்
விடுவர். 'பால் அரிசி வைத்தல்’
என்ற பெயரில்
இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!
தினமும் காலையில்
குழந்தைகளுக்கு சத்து வேண்டும்
என்பதற்காக
ஊட்டச்சத்து பானங்களைக்
கொடுக்கிறோமே. அதை விட அதிக
ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல்
சாறு. தளிர் அருகம்புல்லைச்
சேகரித்து, நீரில் கழுவி,
விழுது போல் அரைத்து பசும்பாலில்
விட்டு சுண்டக் காய்ச்சி,
இரவு படுக்கைக்குப் போகும்
முன்பாக உட்கொண்டு வந்தால்,
எவ்வளவு பலவீனமான உடலும்
விரைவில் தேறிவிடும்.
கிரீன் பிளட்..!
அருகம்புல்லை நீரில் இட்டுக்
காய்ச்சி, பதமான சூட்டில்
குடித்து வந்தால் இதய
நோய்க்கு இதமளிக்கும்.
அனைத்தையும்விட
முக்கியமானது அருகம்புல் சாறு...
மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான்.
இதற்கு இணையாக ரத்தத்தைச்
சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில
மருத்துவத்தில்கூட இல்லை எனலாம்.
அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’
என அழைக்கிறார்கள்,
வெளிநாட்டினர். ரத்த மூலம்
உள்ளவர்கள்,
ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200
மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில்
கலந்து காலைவேளையில் மட்டும்
குடித்து வந்தால்,
மூன்றே வாரங்களில் கட்டுப்படும்.
இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள்
குடித்து வந்தால்,
நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன்,
ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல்
வேரூன்றி... ஆரோக்கியமாய்
வாழ்வோம்.
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment