மணலிக்கீரை

மணலிக்கீரை:
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய
அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன்
சேர்த்து கூட்டு தயார்
செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்
பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த
அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும்
மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும்
இப்பிரச்சனை ஏற்படுகிறது.
இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல்
செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர்
விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம்
அளவு எடுத்து நீரில்
கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில்
பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள்
குறையும். மார்புசளி வயிற்றுப்புண்
குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால்
மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால்
ஈரல் பலப்படும்.

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment